03 ஜனவரி 2013

என்னவள்



தினம் தினம் விடியலில்
என் முன் மலரும்
திருமுகம் அது..
என் வெற்றிக்கு வித்திட்ட
சின்னம் அது ..
பெற்றெடுத்த வலியில்லை
அவளுக்கு ..
பெற்றெடுத்த பெருமைதான்
என்னவளுக்கு ..
வற்றாத நதி இது  என அறுதியிட 
இயலாத காலமிது..
ஆனால்
அறுதியிட்டு சொல்வேன்
வற்றுவதில்லை
அவள் தன் அன்பு ..
பார்த்து பார்த்து செய்தால்
அனைத்தும் எனக்கு..
நானோ இங்கு..
அவளோ அங்கு..
பிரிவோ வாட்டுது
என்னுயிர்க்கு ..
கிடைக்குமோ மீண்டும்
வரமொன்று எனக்கு
என்னவளின் மடியில்
தவழும் மறுபிறப்பு .. 
காத்திருக்கிறேன்
காலமகள்
கண் திறப்பாள் என்று ..

1 கருத்து:

  1. கல்லூரி வாழ்க்கையில் பதித்த என் முதல் கண்ணீர் துளியின் சுவடு இது... என்றும் என் நினைவில் ..

    பதிலளிநீக்கு